Skip to main content

Carrito de compra

¡Obtienes el tratamiento VIP!

Artículos no disponibles para compra.
Por favor revisa tu carrito. Puedes eliminar los artículos no disponibles ahora o los eliminaremos nosotros automáticamente al momento de pagar.
artículosartículo
artículosartículo

Recomendado para ti

Loading...
  • கடல் புறா - முதல் பாகம்

    de sandilyan ...
    அக்கம் பக்கத்தில் எச்சரிக்கையுடன் பார்த்துக் கொண்டே கோடியிலிருந்த தனியிடமொன்றை அடைந்த சுங்க அதிகாரி, இளைஞன் அருகில் வந்ததும், "நீங்கள் அணிந்துள்ள மோதிரத்தின் மதிப்புத் தெரியுமா உங்களுக்கு?" என்று பயத்துடன் வினவினான்.அவன் சொற்களின் உண்மைக் கருத்தைப் புரிந்து கொண்டாலும், புரியாதது போல் நடித்த இளைஞன், "தெரியும், ஆயிரம் பொற்கழஞ்சுகள். அதற்குச் சுங்கம் உண்டானால் விதியுங்கள்" என்று கூறி சுங்க அதிகாரியைக ... Leer más

    $4.99 USD o gratis con Kobo Plus

  • ராஜ பேரிகை - முதல் பாகம்

    de sandilyan ...
    அதற்கு மேல் கேள்வி ஏதும் கேட்காத அமைச்சர் உள்ளே போகலாம் என்பதற்கு அறிகுறியாகத் தமது கையை அசைத்தார். அடுத்த விநாடி அடிமேலடி வைத்துப் பட்டாடையாரும் அவரோடிருந்த மற்றொருவரும் வழிகாட்ட, முன்னால் அந்த முக்காடிட்ட பெண்ணும், அவளுக்குப் பின்னால் வாளின் மேல் கையை வைத்த வண்ணம் அமைச்சரும் சென்றார்கள். மிக நிதானமாகவும் அடக்கத்துடனும் சென்ற அந்த நால்வரும் உட்பிராகாரத்துக்குள் நுழைந்து வலம் வந்து அரங்கன் சந்நித ... Leer más

    $3.00 USD o gratis con Kobo Plus

  • ராஜ பேரிகை - இரண்டாம் பாகம்

    de sandilyan ...
    எதற்கும் நிதானத்தை இழக்காத டூப்ளே கூட அன்று நிதானத்தை இழந்தார். "புஸ்ஸி நன்றாகக் கேள். ஆற்காட்டு நவாப் அன்வருதீன் மாண்டுவிட்டான். அவன் மூத்த மகன் சந்தா சாகிபுவிடம் சிறையிலிருக்கிறான். இளைய மகனான 'கம்பெனி நவாப்' திருச்சிக்கு ஓடிவிட்டான்" என்று சொல்லிக் கொண்டு போன டூப்ளே சிறிது இகழ்ச்சி நகை நகைத்தார்.டி புஸ்ஸி அந்த நகைப்பில் கலந்து கொள்ளவில்லை. டூப்ளேயே மேற்கொண்டு பேசினார். "தவிர, பிரிட்டிஷ் அட்மிரல ... Leer más

    $3.00 USD o gratis con Kobo Plus

  • கடல் புறா - இரண்டாம் பாகம்

    de sandilyan ...
    சோழப் பேரரசனான வீரராஜேந்திரன் அளித்த சமாதான ஓலையுடன் கலிங்கத்துத் துறைமுகமான பாலூர்ப் பெருந்துறைக்கு வந்த கருணாகரப் பல்லவன் என்ற இளையபல்லவன் அங்கு தமிழர்கள் சிறைசெய்து துன்புறுத்தப்படுவதையும், சோழ இளவலான அநபாயனும் ஆபத்தில் சிக்கியிருப்பதையும் உணருகிறான். அங்கு இறங்கியதும் காவலரால் துரத்தப்பட்ட இளையபல்லவன் தப்பியோடி கடாரத்திலிருந்து சோழர்கள் உதவி நாட வந்து பாலூரில் மறைந்துறைந்த அரசன் குணவர்மனையும் ... Leer más

    $4.99 USD o gratis con Kobo Plus

  • நாகதீபம்

    de sandilyan ...
    "அந்த நாகரத்தினக் கல்லைக் கொண்டு வந்தால் போரை நிறுத்திவிடுவீர்களா?" என்று சந்தேகம் குரலில் பூரணமாகத் தொனிக்க வினவினான்."ஆம்" என்று திட்டமாக அறிவித்தார் சக்கரவர்த்தி."தங்களிடம் நவரத்தினங்களுக்குக் குறைவா?""இல்லை""பின் அந்த நாகரத்தினம் எதற்கு?""நூர்ஜஹான் விரும்புகிறாள்."இதைக் கேட்டதும் ஹரிதாஸ் ஜாலாவின் சந்தேகம் சிறிது விலகியது. நூர்ஜஹானைத் திருப்தி செய்ய சக்கரவர்த்தி எதையும் செய்வார் என்பதை பாரதமே ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • சந்திரமதி

    de sandilyan ...
    சத்ருஞ்சயன் முகத்தில் வியப்பு விரிந்தது "மேவார் ராணா பெண் கேட்டாலே போதுமே, அவருக்கு யார் பெண் கொடுக்க மறுக்க முடியும்? பெரிய பதவி அல்லவா மகாராணி பதவி!" என்று வினவினான் வியப்பின் ஊடே.தந்தையின் முகத்தில் வருத்தத்தின் சாயை படர்ந்தது. "இருமுறை பெண் கேட்டு அனுப்பினோம். ஒரு முறை அவள் இரு வளையல்களை அனுப்பினாள். இரண்டாவது முறை சேலை ஒன்றை அனுப்பினாள். இதில் ஏதாவது ஓர் அவமானத்திற்கே ஒண்டாலா மீது போர் துவக்க ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • நீலவல்லி

    de sandilyan ...
    இரு கரைகளிலும் இருந்த வீடுகளில் ஏதோ ஓரிரண்டில் சிறு விளக்குகள் கண்களைச் சிமிட்டிக் கொண்டிருந்தன. அப்பொழுது அமாவாசையாகையால் இருள் தனது ஆட்சியைப் பரிபூர்ணமாகச் செலுத்திக் கொண்டிருந்தது.அந்தப் பெண் இருளைச் சிறிதும் இலட்சியம் செய்யாமல் தோணியை ஆற்றின் வேகம் பார்த்துக் குறுக்கே செலுத்திக்கொண்டிருந்தாள். அவள் தோணியோட்டும் திறனை வியந்த அந்த வாலிபன். கேட்டான், "பெண்ணே! இந்த ஆற்றை நன்றாகப் புரிந்துகொண்டிருக ... Leer más

    $1.99 USD o gratis con Kobo Plus

  • நீலரதி

    de sandilyan ...
    போர்வையை அகற்றி எழுந்து உட்கார்ந்த நிலையிலும் இளமாரன் அதிக உயரமிருந்தான். உறுதியுடனும் நீண்டும் திரணை திரணையாக இருந்த கைகளிலிருந்த வடுக்களும் மார்பில் குறுக்கே தெரிந்த நீண்ட வாள் வடுவும், முகத்திலிருந்த இரண்டொரு தழும்புகளும் அவன் பல போர்களைக் கண்டவன் என்பதை வலியுறுத்தின. அவன் பரந்த முகத்தில் வளைந்த புருவங்கள் கருத்திருந்தாலும் தலைக்குழலில் ஏதோ ஓரிரண்டு நரை மயிர்கள் தென்படத் தொடங்கியதால் இளமாரன் அத ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • நீள்விழி

    de sandilyan ...
    காவிரியின் நீர் இரண்டு மூன்று இடங்களில் அரித்து அழகாக ஓடிக்கொண்டிருந்தது. அதன் தண்புனலில் குளித்து அன்றைய பயணத்தின் ஆயாசத்தைத் தீர்த்துக் கொள்ள இஷ்டப்பட்ட அந்த வாலிபன் கோட்டையின் வட பாகத்து மதிலை நோக்கிச் சென்றான். மதிலை அடைந்து வாயிலையும் தாண்டியிருப்பான்; அவனைத் தாண்டவிடாது அடித்தது சற்று எட்ட இருந்த வாவியொன்று. அந்த வாவியின் அழகு அவன் இதயத்தைக் கொள்ளை கொண்டது. பச்சை பச்சையாக வட்ட வட்டமாக நீரின் ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • கடல் ராணி

    de sandilyan ...
    கண்களை அப்படி அவன் மூடியிராவிட்டால், முழுச் சோம்பேறியாக இல்லாவிட்டால், அதே கட்டிடத்தை நோக்கி இரு வெள்ளையர் வருவதைக் கவனித்திருப்பான். வந்தவர்களும் நல்ல எண்ணத்தோடு வரவில்லை என்பதையும் புரிந்து கொண்டிருப்பான். ஆனால், தூக்கம் தெளியாததால் வந்த இருவரில் ஒருவன் பூட்ஸால் தன்னை உதைத்த பிறகே லேசாகக் கண்களைத் திறந்தான். இன்னொரு வெள்ளையன் அதே சமயத்தில் கட்டிடக் கதவைத் தடதடவெனத் தட்ட... உள்ளிருந்த பெண் வெளியே ... Leer más

    $4.99 USD o gratis con Kobo Plus

  • ஜலதீபம் - மூன்றாம் பாகம்

    de sandilyan ...
    கவர்னர் ஏஸ்லாபியின் கண்களில் விஷமம் தாண்டவமாடியது. "அந்த நுட்பத்தை நாம் அறியலாமா?' என்று அவர் கேட்ட கேள்வியிலும் கேலி இருந்தது.அதை லட்சியம் செய்யாத கிப்போர்ட், "அரபிக் கடலில் ஆங்கரேயையும் துரத்தி பிரிட்டிஷ் கப்பல்கள் வருவது இதுதான் முதல் தடவை. இதிலிருந்து என்ன தெரிகிறது!" என்றான்."என்ன தெரிகிறது கிப்போர்ட்?" என்றார் கவர்னர் சர்வ சாதாரணமாக."அரபிக் கடலில் கனோஜியின் வலு குறைகிறதென்று தெரிகிறதல்லவா?" ... Leer más

    $4.99 USD o gratis con Kobo Plus

  • கன்னி மாடம்

    de sandilyan ...
    அபராஜிதன் இதற்குப் பதில் சொல்லாமல் ஏதோ சிந்திக்கத் தொடங்கினான். அவன் சிந்தனையைத் துண்டித்துக் கருணாகரத் தேவன் பேசலானான் "பிரபு! நாடு சிதறிவிடப் போகிறது. நாலாபக்கங்களிலும் யுத்த மேகங்கள் கவிந்து நெருங்குகின்றன. பாண்டிய நாடு சிங்களவர் கைகளில் சிக்கிக் கொண்டிருப்பதை விரும்பாத சோழ மன்னனான ராஜாதிராஜன் பாண்டிய நாட்டைத் தாக்கச் சித்தமாகிறான். இலங்காபுரனால் கீழைமங்கலத்தையும் மேலைமங்கலத்தையும் அடைந்த குறுந ... Leer más

    $4.99 USD o gratis con Kobo Plus